செய்திகள்

ஆட்கடத்தல் சந்தேகநபர்கள் நால்வர் மன்னாரில் கைது!

வெளிநாடுகளுக்கு கடல்வழியாக ஆட்களை கடத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கைது நடவடிக்கை தலைமன்னாரில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பேசாலி, மன்னாரை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை தலைமன்னார், மணல்மேடு 3 இல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 02 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

-(3)