செய்திகள்

பைரவா படம் பார்க்கும்போது இருதரப்பினர் இடையே தகராறு: 3 பேருக்கு அரிவாள் வெட்டு

அம்பாசமுத்திரம் பகுதியில் பைரவா திரைப்படம் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், மூவருக்கு அரிவாளால் வெட்டப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பைரவா திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கோவில்குளத்தைச் சேர்ந்த வேலாயுதம், மணி, இசக்கிப் பாண்டி ஆகியோருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை மணி மற்றும் இசக்கியை சந்திக்க, வேலாயுதம் சென்றுள்ளார். அப்போது சின்ன சங்கரன்கோவில் செல்லும் சாலையில் வேலாயுதம், மணி, இசக்கிப் பாண்டி ஆகியோரை வழிமறித்த கும்பல், திடீரென்று அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயமுற்ற அம்மூவரும், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

N5