நாகூரில் நாளை தடையை மீறி ஜல்லிக்கட்டு: இந்திய தேசிய லீக் அறிவிப்பு
தடையை மீறி நாகூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் ஆபுமு நிஜாமுதீன் கூறினார்.
இதுதொடர்பாக நாகூரில் செய்தியாளர்களை சந்தித்த நிஜாமுதீன், ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் தடை விதித்திருப்பது தமிழர்களின் மரபுகளை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜகவினர் கூறி வருவது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் கூறினார்.
தடையை மீறி நாகூரில் நாளை ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் நிஜாமுதீன் தெரிவித்தார்.
N5