செய்திகள்

இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை: பிரதமர் அறிவிப்பு

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இரா.சாணக்கியன் எம்.பியினால் அரசியல் கைதிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையின்படியோ அல்லது நாட்டின் சட்டங்களுக்கமையவோ கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் அரசியல் குற்றங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எவரும் இல்லை என்று பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். -(3)