செய்திகள்

”இலங்கை மீனவர்கள் இந்திக் கடற்படையினரால் தாக்கப்பட்டதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை” : இந்தியா அறிக்கை

இலங்கை மீனவர்கள் இந்திக் கடற்படையினரால் தாக்கப்பட்டதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்று இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பதாக ஜூன் 17ஆம் திகதி வெளியாகியிருக்கும் செய்திகள் அனைத்தும் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானவையாகும்.

இவ்வாறான எந்த ஒரு சம்பவமும் இடம்பெறவில்லையென நாம் மிகவும் உறுதியாக தெரிவிக்கின்றோம். மிகவும் உயர்ந்த ஒழுக்கத்தையும் தொழில்திறனையும் கடைப்பிடித்து வரும் இந்திய கடற்படை குற்றமற்ற வகையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றது.

ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இருதரப்பு பொறிமுறைகள் மற்றும் புரிந்துணர்வுகள் ஆகியவற்றின் ஊடாக இலங்கை இந்திய மீனவர்கள் சம்பந்தமான சகல பிரச்சனைகளுக்கும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் தீர்வினை காண்பதற்கு இந்தியா மிகுந்த உறுதிப்பாட்டுடன் உள்ளது.
-(3)