செய்திகள்

இலஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டில் நீதிபதியொருவர் கைது

இலஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த காதிமன்ற நீதிபதியொருவர் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நீதிபதி 5,000 ரூபாயினை  இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட நிலையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை  எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

-(3)