உணர்வுபுர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று சனிக்கிழமை பகல் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உணர்வுபுர்வமாக இடம்பெற்றது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலும் நிகழ்வு இடம்பெற்றது. பெருமளவு மக்கள் இதில் கலந்துகொண்டு உயிர்நீத்த தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தினர். பலர் கண்ணீர் சிந்தி அழுதனர்.
இன்று காலை 07.00 மணி முதல் பகல் 09.30 வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெற்றன.
அதேநேரம் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 க்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டது. பொதுமக்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் உறுப்பினர்களும் மற்றும் சமயத் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் நினைவேந்தல் நிகழ்வில் பங்குபற்றினர்.
-(3)




