செய்திகள்

உயிரிழந்தவர்கள் 58 ;காணாமல் போனவர்கள் 144

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 144 என்று அந்த நிலையம் கூறியுள்ளது.

அத்துடன் 420,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,299,806 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 610 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

n10