செய்திகள்

ஊழல்­மிக்க ராஜ­பக்ஷ ஆட்­சியை தோற்­க­டித்­தது குற்­றமா? மே தினக் கூட்டத்தில் ரணில் கேள்வி

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ர்ப்பு என்ற தொனிப்­பொ­ருளில் பொது எதி­ர­ணியின் மே தின கூட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளனர். ஐக்­கிய தேசியக் கட்சி என்ன குற்றம் இழைத்­தது.? ஊழல்­மிக்க ராஜ­பக்ஷ ஆட்­சியை தோற்­க­டித்­தது குற்­றமா? நாட்டின் நல­னுக்கு ஆட்சி மாற்­றத்­திற்கு வழி சமைத்தோம். வெறு­மனே கார்ட் போர்ட் துட்­ட­கைமுனு கும்பல் ஐக்­கிய தேசியக் கட்­சியை எதிர்ப்பதற்கு முன்பு மக்­க­ளுக்கு செய்த துரோ­கத்தை நினைத்து பார்க்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்சி யின் மாபெரும் மே தின பொதுக் கூட்டம் நேற்று பொரளை கெம்பல் பார்க் மைதா­னத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்துகொண்டு உரை­யாற்றுகையிலேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் குறிப்­பி­டு­கையில்,

“தற்­போது நாட்டு மக்கள் புதி­தாக சிந்­திக்க ஆரம்­பிக்க வேண்டும். சர்­வ­தே­சத்­துடன் போட்டி போட்டு வெற்றி பெறு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தை பலப்­ப­டுத்த வேண்டும். அதன்­போது முத­லீ­டுகள் எம்மை நோக்கி திரண்டு வரும். நாட்டு மக்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்க வேண்டும். மே தின கூட்­டத்­திற்கு வந்­திருக்கும் சனத்­தொகையை பார்த்தால் ஐந்து இலட்சம் பேர் நுழையும் மைதா­னத்தை முதலில் நிர்­மா­ணிக்க வேண்டும். துறை­முக நகர் திட்­டத்தை ஆரம்­பிக்க முதல் இதனை ஆரம்­பிக்க வேண்டும்.
62
மேலும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ர்ப்பு என்ற தொனிப்­பொ­ருளில் பொது எதி­ர­ணியின் மே தின கூட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளனர். ஐக்­கிய தேசியக் கட்சி என்ன குற்றம் இழைத்­தது.? ஊழல்­மிக்க ராஜ­பக்ஷ ஆட்­சியை தோற்­க­டித்­தது குற்­றமா? நாட்டின் நல­னுக்கு ஆட்சி மாற்­றத்­திற்கு வழி சமைத்தோம். வெறு­மனே கார்ட் போர்ட் துட்­ட­கைமுனு கும்பல் ஐக்­கிய தேசியக் கட்­சியை எதிர்ப்பதற்கு முன்பு மக்­க­ளுக்கு செய்த துரோ­கத்தை நினைத்து பார்க்க வேண்டும்.

ஐக்­கிய தேசியக் கட்சி நல்­லி­ணக்­கத்­திற்­கான கட்­சி­யாகும். மக்­களின் பணத்தை கொள்­ளை­யிட்டு நாட்டை ஏமாற்றிய கார்ட் போர்ட் துட்­டகைமுனு கும்­ப­லுக்கு எவ்­வாறு ஐக்­கிய தேசியக் கட்சி எதி­ர்க்க முடியும். ஐக்­கிய தேசியக் கட்சி இல்­லாமல் செய்­வ­தற்கு இட­ம­ளிக்க போவ­தில்லை.

நாட்டு மக்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரித்தால் ராஜ­ப­க்ஷ­வி­ன­ருக்கு மனதில் பயமும் வெறுப்பும் ஏற்­படும். உலக மகா திருடர் உத­யங்க வீர­துங்­கவை சந்­தித்து கை கோர்த்து கதைக்கும் கார்ட் போர்ட் துட்­டகைமுனு எதி­ர­ணி­யினர் விசேட நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­விற்கு எதிர்ப்பு தெரி­விக்­கின்­றனர். அத்­துடன் எந்­த­வொரு கார்ட் போர்ட் துட்­ட­கை­மு­னுக்­க­ளுக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியை இல்­லாமல் செய்­வ­தற்கு இட­ம­ளிக்க போவ­தில்லை.

அடுத்த தேர்­தலை இலக்கு வைத்து ஐக்­கிய தேசியக் கட்­சியை பலப்­ப­டுத்­து­வதா? அல்­லது நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வதா? என்­ப­தனை மக்­களே முடிவு செய்­ய­வேண்டும். அத்­துடன் கொழும்பு பேலி­ய­கொ­டை­யி­லி­ருந்து கடல் மார்க்­க­மாக கோட்­டைக்கு அதி­வேக பாதையை நிர்­மா­ணிக்­க­வுள்ளோம். இது போன்று பல நக­ரங்­களை அபி­வி­ருத்தி செய்­ய­வுள்ளோம். மத்­தள விமான நிலையம் மற்றும் மாகம்­புர துறை­மு­கத்­திற்கு விமா­னங்­க­ளையும் கப்­பல்­க­ளையும் கொண்டு வருவோம். துறைமுக நகர் திட்டத்தை நாணய கேந்திர நிலையமாக மாற்றுவோம்.

எனவே நாட்டை கட்டியெழுப்பும் தேசிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். இதுபோன்று பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்போம். அர்ப்பணித்த மக்களுக்கு அடுத்து வரும் காலங்களில் சேவை செய்வதற்கு தயாராக உள்ளோம் என்றார்.
R-06