ஏறாவூரில் வீதியில் பொதுமக்களை முழங்காலில் இருக்கச் செய்து தண்டனை வழங்கி இராணுவ சிப்பாய்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தம்!
ஏறாவூரில் பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணித்தக் குற்றச்சாட்டில் வீதியில் முழந்தாளில் இருக்க வைத்து பொது மக்களுக்கு தண்டனை வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதியில் உத்தரவின் பேரில் இவர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஏறாவூர் பகுதியில் பயணக் கட்டுப்பாட்டை மீறி வீதியில் பயணித்த குற்றச்சாட்டில் பொதுமக்கள் சிலரை வீதியோரத்தில் முழங்காலில் இருந்து கைகளை உயர்த்தியவாறு இருக்கச் செய்யும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆர்வலர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இது குறித்து கவனம் செலுத்தியுள்ள இராணுவத் தளபதி அந்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி குறித்த இராணுவ சிப்பாய்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.