ஐ.தே.க. விலகினால் மைத்திரி அரசை சு.க. பாதுகாக்குமாம்!
இதனால், தற்போது குறித்த ஆளுநரான அர்ஜுன மகேந்திரன் வெளிநாடு சென்று ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றார். சரியான முறையில் பார்த்தால் அவர் மீதான விசாரணைகள் முடியும்வரை அவருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்திருக்க வேண்டும். எனினும், அரசு இந்த விடயத்தில் பெரும் தவறைச் செய்துள்ளது. ஊழல், மோசடிகள் தொடர்பில் வெளியில் இருப்பவர்களுக்கு கையைக்காட்டும் இந்த ஆளும் தரப்பினர் தங்களுக்குள் இருக்கும் மோசடிக்காரர்களை ஆதரிக்கின்றனர். இதுபோன்ற அரசின் செயற்பாடுகளால் அரசுக்கும் திருடர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் எமக்கு ஏற்படுகின்றது. இதேவேளை, ஏப்ரல் 23ஆம் திகதிக்குப் பின்னர் மைத்திரி அரசிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியேறுமாக இருந்தால் அவ்வரசைப் பெறுப்பேற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவே உள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசிலிருந்து வெளியேறுமாக இருந்தால், நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்துடன் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசை பெறுப்பேற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது. அரசினால் மேற்கொள்ளவேண்டிய ஏனைய பணிகளை நாம் சிறப்பாக முன்னெடுக்கவும் தயாராகவுள்ளோம்” – என்றார்




