ஓய்வு நேரத்தில் புத்தகம் படிக்கும் சமந்தா
சிவகார்த்திகேயனோடு நடிக்கும் ‘சீமராஜா’ படத்துக்காக சமீபத்தில் ஒரு பாடல் காட்சி சாலக்குடி அருவியில் எடுக்கப்பட்டது. அருவியில் நனைந்து ஜல்பு பிடித்துக் கொண்ட நிலையில் படப்பிடிப்புக்கு இடையில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டாராம் சமந்தா. ‘ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டால், ‘புத்தகம் படிப்பேன்’ என்றார்.
‘என்ன புத்தகம்?’ என்று கிடுக்கிப்பிடி போட்டோம். ‘ஹலோ, நான் சும்மா கெத்துக்காக சொல்லுறேன்னு நெனைக்கிறீங்களா? மார்க் மேன்சன் எழுதின ‘The subtle art of not giving a f*ck’ புக்கைத்தான் லேட்டஸ்டா படிச்சேன். அதுலே மார்க் என்ன சொல்லுறாருன்னா….’ என்று அவர் ஆரம்பிக்க, புத்தகத்தின் தலைப்பை கேட்டே தலை சுற்றிப் போனோம்.(15)




