காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்று London Trafalgar square North terrace இல் 4 மணி தொடக்கம் 7 மணி வரை இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை நாடுகடந்த அரசாங்கத்தின் மனித உரிமை அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.
இதில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நிலை என்ன? என கேள்வி எழுப்பப்பட்டதுடன் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் பிரித்தானியா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பொறுப்பு கூறலுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் பெருந்திரளான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமது எதிர்பை பதிவு செய்தனர்.
![IMG_2598[1]](http://www.samakalam.com/wp-content/uploads/2018/08/IMG_25981-1024x768.jpg)
N5




