கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி பியசேன மரணம்!
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இன்று (17) காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற இவர் விபத்தினைச் சந்தித்துள்ளார்.
இவர் சென்ற மோட்டார் சைக்கிளே சேதமடைந்துள்ள நிலையில், கடுங்காயமுற்ற இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
2010 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற இவர், பின்னர் ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்துகொண்டிருந்தார்.
-(3)




