செய்திகள்
கொழும்பில் அமைக்கப்பட்ட உயரமான நத்தார் மரம்
கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள உலகில் உயரமான நத்தார் மரம் நேற்று இரவு திறந்து வைக்கப்பட்டது.
நேற்று இரவு 8.30 மணியளவில் அந்த மரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
20 கோடி ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட இந்த மரத்தை கடந்த சில மாதங்களாக அமைத்து வந்த நிலையில் அது தொடர்பாக கத்தோலிக்க அமைப்பொன்றின் எதிர்ப்பு காரணமாக இடையில் சில வாரங்களாக கைவிடப்பட்டு மீண்டும் மரத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நேற்று இரவு வெற்றிகரமாக அது திறந்து வைக்கப்பட்டுள்ளது. -(3)




