செய்திகள்

கொழும்பில் மாணவர்களிடையே கண் நோய் பரவல்

கொழும்பு கல்வி வலயத்தில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது.

கொழும்பு பிராந்திய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் கடிதம் எழுதி, கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால், உடனடியாக பள்ளி மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பரிந்துரைகளை பெற வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், பாடசாலையில்; கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்களை மற்ற மாணவர்களிடமிருந்து தனித்தனியாக அமர்த்துமாறும் வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

-(3)