சசிகலாவை முதலமைச்சராக முடிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது
சசிகலாவை முதலமைச்சராக முடிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் பரபரப்பான சூழ்நிலையில் இருந்து வரும் நிலையில்,தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம்,தமிழக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் சுருக்கம்;
* ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள்.
* 2012 க்கு பிறகு நான் சசிகலாவிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவரிடம் எந்த உத்தரவும் பெறவில்லை.
* 2012 லிருந்து ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை சசிகலாவிடம் தொலைபேசி வாயிலாக கூட பேசியது கிடையாது.
* அவர்கள் என்ன அசிங்க படுத்தியதாக நினைக்கவில்லை. நான் வகித்த முதல்வர் பதவிக்கு அவமானம் நேர்ந்ததாக கருதுகிறேன்.
* ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக சசிகலா இருந்தாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிக்க மறுப்பு…
* ஜெயலலிதா எந்த வேலையை செய்ய சொல்லி பணித்தார்களோ அந்த வேலையை மட்டுமே நான் செய்தேன் .
* சசிகலாவை முதலமைச்சராக முடிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
* சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என்ற போது அதிருப்தி இல்லை, முதலமைச்சராக வரவேண்டும் என்ற போது ஏற்பட்டது.
* சசிகலா மீதான அதிருப்தி கீழ் மட்டத்திலிருந்து உருவானது.
* என் சொந்த ஊரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி சேவை செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தேன்.
* மற்ற எம்எல்ஏக்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பில்தான் உள்ளனர் .
* சட்டமன்ற கூட்டத்தில் என்னுடைய பலம் நாட்டு மக்களுக்கு தெரியும் .
* அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மக்களின் மனநிலையை அறிந்து மனசாட்சிப்படி வாக்கு அளிக்க வேண்டுகிறேன்.
* என் பின்னணியில் யாரும் இல்லை அதற்கான தேவையும் இல்லை.
* பாஜகவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை.
* நிஜமான அதிமுக நல்லவர்களின் பக்கமே இருக்கும்.
* தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை.
* தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு நான் காரணமல்ல. யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும்.
* தற்போது இருப்பது தற்காலிக ஏற்பாடுதான். முறையாக தேர்தல் நடத்தி அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரமாட்டேன்.
* சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு விரைவில் மக்களை சந்திப்பேன்.
n10




