செய்திகள்
சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சனத் நிஷாந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவருக்கு எதிராக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-(3)




