செய்திகள்

சமா­தான உடன்­ப­டிக்­கைக்குப் பிறகு கடந்­து­விட்ட மூன்று தசாப்­தங்கள்

வீரகத்தி தனபாலசிங்கம்

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காணும் முயற்­சி­யாக முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்­த­னவும் முன்னாள் இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியும் கொழும்பில் இந்­தி­ய – ­இ­லங்கை சமா­தான உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்டு நேற்­றைய தினத்­துடன் சரி­யாக 30 வரு­டங்கள் கடந்து விட்­டன இலங்கைப் பிரச்­சி­னையில் 1983 கறுப்பு ஜூலைக்குப் பின்­ன­ரான இந்­தி­யாவின் நேரடித் தலை­யீட்டின் உச்சக் கட்­ட­மாக அமைந்த அந்த உடன்­ப­டிக்­கையை அடுத்து மாகாண சபைகள் முறையை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­காக இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­புக்கு 13 வது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. மாகாண சபைகள் முறையும் அடுத்த வரு­டத்­துடன் 30 வயதை எட்­ட­வி­ருக்கும் நிலையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு குறித்து இன்­னமும் நாம் பேசிக்­கொண்­டி­ருக்­கிறோம்.

இலங்­கையின் பிர­ப­ல­மான அர­சியல் விஞ்­ஞானப் பேரா­சி­ரி­யர்­களில் ஒரு­வ­ரான ஜெய­தேவ உயன்­கொட இந்­திய -இலங்கை சமா­தான உடன்­ப­டிக்­கையின் மூன்று தசாப்த நிறைவை முன்­னிட்டு இந்­தி­யாவின் பிர­தான ஆங்­கிலத் தின­ச­ரி­களில் ஒன்­றான ‘த இந்து’வில் கடந்த வாரம் எழு­திய கட்­டு­ரை­யொன்றில் ‘உடன்­ப­டிக்­கையின் கதை இலங்­கை­யி­னதும் இந்­தி­யா­வி­னதும் வர­லா­று­களின் அங்­க­மா­கி­விட்­டது. ஆனால், உடன்­ப­டிக்­கைக்குப் பிறகு இலங்­கையின் அர­சியல் மாறி­யி­ருக்­கி­றதா என்ற கேள்­விக்கு இல்லை என்­பதும் ஆம் என்­ப­துமே பதி­லாக இருக்கும்’ என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார். பேரா­சி­ரி­யரின் இந்தக் கருத்து உடன்­ப­டிக்­கைக்குப் பிறகு மூன்று தசாப்­தங்கள் கடந்­து­விட்ட நிலை­யிலும் இனப்­பி­ரச்­சி­னையும் அதற்­கான தீர்வு முயற்­சி­களும் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்­கின்­றன என்­பதை முரண்­ந­கை­யாக உணர்த்­து­கின்­றது.

நாம் விரும்­பு­கின்­றோமோ இல்­லையோ சமா­தான உடன்­ப­டிக்­கைக்குப் பிறகு இலங்­கையில் அதி­காரப் பர­வ­லாக்கல் தொடர்­பி­லான அர­சியல் விவா­தங்கள் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 வது திருத்­தத்தை ஒரு அள­வு­கோ­லாகக் கொண்டே பெரும்­பாலும் அமைந்­தி­ருக்­கின்­றன. மாகாண சபைகள் முறையை இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக தாங்கள் ஏற்றுக் கொள்­ள­வில்லை என்று தமி­ழர்கள் கூறு­கின்ற போதிலும், அதில் பங்­கேற்­காமல் இருக்­கவும் அவர்­களால் முடி­ய­வில்லை.

Signing of Indo - Sri Lanka Accord

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை வரை­வ­தற்கு தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற செயன்­மு­றை­க­ளின்­போது அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கல் விவ­கா­ரத்தைப் பொறுத்­த­வரை பரி­சீ­ல­னைக்கு எடுக்­கப்­ப­டு­கின்ற அதிகாரங்கள் தொடர்பான யோசனைகள் 13 வது திருத்­தத்தின் ஏற்­பா­டு­க­ளையும் விட பெரு­ம­ள­வுக்கு அதி­க­மா­ன­வை­யாக இருக்­கின்­றன என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அவர்கள் பகி­ரங்­க­மாக பல தட­வைகள் கூறி­யி­ருக்­கிறார். தற்­போது மாகாண சபை­க­ளுக்குச் சட்­ட­ரீ­தி­யாக இருக்­கின்ற அதி­கா­ரங்­களைக் கூட முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த அனு­ம­திக்­காத சிங்­கள அர­சியல் சமு­தா­யத்தை 13 வது திருத்­தத்தில் உள்­ளதை விடவும் கூடுதல் அதி­கா­ரங்­களைக் கொண்­ட­தான ஏற்­பா­டு­களை புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கு­வ­தற்கு இணங்­க­வைக்க முடி­யுமா என்ற கேள்வி இயல்­பா­கவே எழு­கி­றது. அத்­த­கைய இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உறு­தி­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கக்­கூ­டிய அர­சியல் துணி­வாற்றல் இன்­றைய தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்­திடம் இல்லை என்­பதை கடந்த மாதத்­தைய அர­சியல் நிகழ்­வுப்­போக்­குகள் தெளி­வாக வெளிக்­காட்­டின.

கடந்த வருட ஆரம்­பத்தில் இருந்து அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்தச் செயன்­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் இலங்­கையின் மூன்று பிர­தான பௌத்த பீடங்­களின் மகா­நா­யக்­கர்­களும் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று நாட்­டுக்குத் தேவை­யில்லை என்றும் வேண்­டு­மானால் தேர்தல் முறையில் மாற்­றத்தைச் செய்­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்புத் திருத்­த­மொன்றைக் கொண்­டு­வ­ரலாம் என்றும் கூட்­டாக அர­சாங்­கத்­துக்கு திடீ­ரென்று ‘அறி­வு­றுத்­தலை’ விடுத்­ததன் நோக்­க­மென்ன? அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்கள் என்று சொல்­லப்­ப­டு­கின்­றவை இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்றைக் காணக்­கூ­டி­ய­தாக விரி­வான அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கல் ஏற்­பா­டு­க­ளுக்கு வழி­வ­குத்­து­வி­டா­தி­ருப்­பதை உறு­தி­செய்­வதில் சிங்­கள பௌத்த சமூ­கத்தின் சார்பில் தாங்கள் அக்­க­றை­யாக இருப்­ப­தாக மகா­நா­யக்­கர்கள் வெளிக் காட்டிக் கொள்­கி­றார்கள் அர­சாங்­கத்தின் தலை­வர்­களும் மகா­நா­யக்­கர்­களின் உணர்­வு­களைச் சாந்­தப்­ப­டுத்தும் வகையில் அவர்­க­ளுக்கு வாக்­கு­று­தி­களை வழங்­கி­ய­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவை மகா­நா­யக்­கர்­க­ளுக்கு காண்­பித்து அவர்­களின் அபிப்­பி­ரா­யங்­களை அறிந்­து­கொண்ட பின்­னரே இறுதி வரைவு நிறை­வு­ செய்­யப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேரில் சென்று அவர்­களை வணங்கி உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். இத்­த­கைய சூழ்­நி­லையில் உத்­தேச அர­சி­ய­ல­மைப்பில் 13 வது திருத்­தத்­திற்கு அப்­பா­லான அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கல் ஏற்­பா­டுகள் உள்­ளடக்­கப்­படும் என்று தமி­ழர்கள் எவ்­வாறு நம்­பிக்கை­ வைக்க முடியும்? அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்­களின் வீச்­செல்­லையை யார் தீர்­மா­னிக்­கப்­போ­கி­றார்கள் என்­பது முன்­கூட்­டியே வெளிக்­காட்­டப்­பட்­டி­ருக்கும் நிலையில்’ சிங்­கள அர­சியல் சமு­தா­யத்­தி­ட­மி­ருந்து அர­சியல் தீர்வு விட­யத்தில் தமி­ழர்கள் எதிர்­பார்க்கக் கூடி­ய­வற்றின் எல்­லையும் புரி­ய­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­றுதான் சொல்­ல­வேண்டும்.

உள்­நாட்டுப் போரின் மிகவும் ஆரம்பக் கட்­டத்­தி­லேயே இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்றைக் கண்­டு­விட முடியும் என்ற நம்­பிக்­கையில் இந்­தியா மேற்­கொண்ட ஒரு முயற்­சியே சமா­தான உடன்­ப­டிக்­கை­யாகும். கறுப்பு ஜூலைக்கு பின்­ன­ரான சூழ்­நி­லை­களில் இந்­திய அர­சாங்­கத்தின் நெருக்­கு­தல்கள் கார­ண­மா­கவே அன்­றைய ஜனா­தி­பதி ஜெய­வர்­தன உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட முன்­வந்தார். அந்த உடன்­ப­டிக்கை எவ்­வாறு குழப்­பி­ய­டிக்­கப்­படும் என்­பதை முன்­கூட்­டியே உய்த்­துணர முடி­யாத அள­வுக்கு அவர் ஒன்றும் ஏமா­ளித்­த­ன­மான அர­சி­யல்­வா­தி­யல்ல.

உடன்­ப­டிக்­கையின் ஏற்­பா­டு­க­ளுக்கு எவ்­வாறு முட்டுக் கட்­டை­களை ஏற்­ப­டுத்­து­வது என்­ப­தையும் தீர்­மா­னித்துக் கொண்­டுதான் ராஜீவ் காந்­தி­யுடன் உடன்­ப­டிக்­கையில் அவர் கைச்­சாத்­திட்டார் என்­பதை கடந்த கால இலங்கை அர­சி­யல் நிகழ்­வுப்­போக்­கு­களைத் திரும்பிப் பார்த்தால் புரிந்­து­கொள்ள முடியும். தனக்கு நெருக்­கு­தலைக் கொடுத்த ராஜீவ் காந்­தியின் அர­சாங்கம், சமா­தான உடன்­ப­டிக்­கையை விடு­தலைப் புலிகள் ஏற்­றுக்­கொண்­டி­ராத சூழ்­நி­லையில் இலங்­கையில் ஒரு பாடத்தைப் படிக்கும் என்­பதை ஜெய­வர்­தன நன்கு தெரிந்து வைத்­தி­ருந்தார். அதை அவர் மான­சீ­க­மாக விரும்­பி­யி­ருப்பார் என்­பதில் சந்­தே­க­மில்லை. இலங்கைப் பிரச்­சி­னையில் தமி­ழர்­களின் சார்பில் இந்­தியா தீவி­ர­மாகத் தலை­யீடு செய்து வந்த போக்கை  மாற்­றி­ய­மைப்­பதில் ஜெய­வர்­தன வெற்றி கண்டார் என்று தான் சொல்­ல­வேண்டும்.

Sri Lanka New Constitution (1)

வட­மா­கா­ணத்­தையும் கிழக்கு மாகா­ணத்­தையும் தற்­கா­லி­க­மாக இணைப்­ப­தற்கு உடன்­ப­டிக்­கையில் ஒரு ஏற்­பாடு இருந்­தது. இணைந்த வடக்­கு–­கி­ழக்கு மாகாண சபைக்கு தேர்­தல்கள் நடத்­தப்­பட்டு ஒரு­வ­ருட காலத்தில் இணைப்பின் எதிர்­கா­லத்தைத் தீர்­மா­னிப்­ப­தற்­காக கிழக்கு மாகா­ணத்தில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்று நடத்­தப்­பட வேண்டும் என்று உடன்­ப­டிக்­கையில் கூறப்­பட்­டி­ருந்­தது. இது­கு­றித்து அன்று ஜெய­வர்­த­ன­விடம் கேட்­கப்­பட்­ட­போது சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் பட்­சத்தில் வடக்கு– கிழக்கு இணைப்பைத் துண்­டிப்­ப­தற்கு ஆத­ர­வாக தானே முன்­னின்று பிர­சாரம் செய்யப் போவ­தாக அவர் பதி­ல­ளித்­தி­ருந்தார். உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்ட தலை­வரே அந்த இலட்­ச­ணத்தில் தான் அதன் நடை­மு­றைப்­ப­டுத்தல் செய்­மு­றைகள் குறித்து சிந்­தித்தார். இவ்­வா­றாக இலங்கைத் தரப்பில் சூழ்ச்­சித்­த­ன­மான நோக்­கங்­க­ளுடன் செய்து கொள்­ளப்­பட்­டதே அந்த உடன்­ப­டிக்­கை­யாகும். உடன்­ப­டிக்­கைக்குப் பிறகு ஓரிரு மாதங்கள் கடந்த நிலையில் வடக்கு கடலில் படகில் வந்து கொண்­டி­ருந்த விடு­தலை புலிகள் இயக்­கத்தின் மூத்த உறுப்­பி­னர்கள் பலர் இலங்கைப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டனர். பலாலி இரா­ணுவ முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அவர்­களை கொழும்­புக்கு கொண்­டு­வரும் முயற்­சியில் அப்­போது தேசிய பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த லலித் அத்­துலத் முதலி ஈடு­பட்­டி­ருந்தார். அதை அறிந்த அந்த விடு­தலை புலிகள் தற்­கொலை செய்­து­கொண்­டதும், அதை­ய­டுத்து இந்­திய அமை­தி­காக்கும் படைக்கும் விடு­தலை புலி­க­ளுக்கும் இடையே 1987 அக்­டோ­பரில் சண்டை மூண்­டதும்  எல்­லோ­ருக்கும் தெரியும். பின்னர் ஒரு சந்­தர்ப்­பத்தில் லலித் அத்­துலத் முத­லி­யிடம் விடு­தலை புலி­களின் மூத்த உறுப்­பி­னர்­களை கொழும்­புக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு மேற்­கொண்ட முயற்­சியால் சமா­தான உடன்­ப­டிக்கை குழம்பிப் போகும் என்று நினைக்­க­வில்­லையா என்று கேட்­ட­போது உடன்­ப­டிக்­கையைக் குழப்­பு­வ­தற்­கா­கவே தான் அவ்­வாறு செய்­த­தாக கூறி­னாராம். இதை அவரின் நெருங்­கிய நண்பர் ஒருவர் அவரின் நினை­வாக ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்றில் எழு­திய கட்­டு­ரையில் தெரி­வித்­தி­ருந்தார் என்பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வா­றான கெடு­தி­யான நோக்­கங்­க­ளு­ட­னேயே ஜெய­வர்த்­தன அர­சாங்கம் உடன்­ப­டிக்­கை­யுடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்­களை அணு­கி­யது. சமா­தான உடன்­ப­டிக்­கையை இலங்­கையோ அல்­லது இந்­தி­யாவோ இன்­னமும் முறைப்­ப­டி­யாக கைவி­ட­வில்லை என்­பதைத் தவிர, அதை இப்­போது இரு நாடு­க­ளுமே உரிமை கொண்­டா­டு­வ­தில்லை என்­பதே உண்­மை­யாகும். ஜெய­வர்­த­ன­வுக்குப் பிறகு பத­விக்கு வந்த எந்த இலங்கை ஜனா­தி­ப­தி­யுமே சமா­தான உடன்­ப­டிக்கை குறித்து பெரி­தாகப் பேச­வில்லை. ஆனால், 13 ஆவது திருத்தம் குறித்து அவர்கள் தொடர்ந்து பேசி வந்­ததில்   வஞ்­ச­கத்­த­னமான நோக்கம் இருந்­தது. அர­சியல் தீர்வு, அதி­காரப் பர­வ­லாக்கல் குறித்து சர்­வ­தேச சமூ­கத்­தி­ட­மி­ருந்து அதுவும் குறிப்­பாக இந்­தி­யா­வி­ட­மி­ருந்து வரக்­கூ­டிய எந்­த­வொரு வலி­யு­றுத்­த­லையும் சமா­ளிப்­ப­தற்கு மாத்­தி­ரமே 13 ஆவது திருத்தம் கொழும்பு அர­சாங்­கங்­க­ளுக்கு கை கொடுத்துக் கொண்­டி­ருக்­கி­றது. போரை முழு­மூச்­சாக முன்­னெ­டுத்து அதை அதன் தர்க்­க­ரீ­தி­யான முடி­வுக்கு கொண்­டு­வந்த ராஜபக் ஷ ஆட்­சியில் 13 ஆவது திருத்­தத்தின் ஏற்­பா­டு­க­ளுக்கு அப்பால் சென்று அதி­காரப் பர­வ­லாக்­கலை (13+) செய்­வது குறித்தும் உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­பட்ட விசித்­தி­ரத்தைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. அதே ராஜபக் ஷ ஆட்சி 2013 செப்­டெம்­பரில் வட­மா­காண சபைக்கு தேர்­தலை நடத்­து­வ­தற்கு முன்­ன­தாக மாகாண சபை­க­ளுக்கு 13 ஆவது திருத்­தத்தின் மூல­மாக இருக்­கின்ற காணி அதி­கா­ரங்­க­ளையும் பொலிஸ் அதி­கா­ரங்­க­ளையும் இல்­லாமல் செய்­வ­தற்கு அர­சி­ய­மைப்­புக்கு திருத்­தங்­களைக் கொண்­டு­வ­ரு­வது குறித்து யோசனை செய்­தது ஒன்றும் இர­க­சி­ய­மா­ன­தல்ல .ஆனால், பிறகு அந்த யோசனை  கைவி­டப்­பட்­டது. இந்­தி­யா­வி­ட­மி­ருந்து அதற்கு எதிர்ப்பு வந்­தி­ருக்­கக்­கூடும் என்று அப்­போது பேசப்­பட்­டது.

இந்தக் கட்­டத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கொழும்பு அர­சாங்­கங்கள் கடைப்­பி­டித்த அணு­கு­மு­றைகள் குறித்து முன்னாள் ஜனா­தி­பதி திரு­மதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க இந்­தி­யாவில் வைத்து ஒரு தடவை தெரி­வித்த கருத்தை நினை­வு­ப­டுத்­து­வது பொருத்­த­மா­ன­தாக இருக்கும்.

2009 மேயில் உள் நாட்டுப் போர் முடி­வுக்குப் வரு­வ­தற்கு  மூன்று மாதங்கள் முன்­ன­தாக ராஜீவ் காந்தி பற்றி முன்னாள் இந்­திய மத்­திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் எழு­திய நூலொன்றின் வெளி­யீட்டு வைப­வத்­திலும் கலந்­து­ரை­யா­ட­லிலும் கலந்­து­கொள்­வ­தற்­காக திரு­மதி குமா­ர­துங்க டில்லி சென்­றி­ருந்தார். அந்தக் கலந்­து­ரை­யா­டலில் எமது இன­நெ­ருக்­கடி பற்றி பிரஸ்­தா­பிக்­கும்­போது அவர்  சமா­தான உடன்­ப­டிக்­கைக்குப் பிறகு இலங்­கையில் பத­வியில்  இருந்த சகல அர­சாங்­கங்­க­ளுமே  உடன்­ப­டிக்­கையின் ஏற்­பா­டுகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­தி­ருப்­பதை உறுதி செய்து கொண்­டன என்று  தெரி­வித்­தி­ருந்தார். ‘மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்­களைப் பர­வ­லாக்­கு­வதை நோக்­க­மாகக் கொண்ட ஏற்­பா­டு­களை உள்­ள­டக்­கிய 1987 ஜூலை 29 சமா­தான உடன்­ப­டிக்­கையை இலங்­கையில் அடுத்­த­டுத்து பத­விக்கு வந்த சகல அர­சாங்­கங்­க­ளுமே சூழ்ச்சித் தன­மாகச் சீர்­கு­லைத்­தி­ருக்­கின்­றன. உடன்­ப­டிக்­கையில் விதந்­து­ரைக்­கப்­பட்­டதன் பிர­காரம் அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­பட்­டி­ருக்­கு­மே­யானால், இன­நெ­ருக்­கடி நீண்ட காலத்­துக்கு முன்­ன­ரேயே முடி­வுக்கு வந்­தி­ருக்­கக்­கூடும். 13 வது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்த நானும் முயற்­சித்தேன். ஆனால், இலங்­கையின் அர­சியல் கட்­சி­களில் சில பிரி­வினர் அதற்கு அனு­ம­திக்­க­வில்லை. அதை நடை­மு­றைப்­ப­டுத்­தினால், நாள­டைவில் இலங்­கையில் தனித் தமிழ் நாடு தோன்­று­வ­தற்கு வாய்ப்­பா­கி­விடும் என்று அந்தக் கட்­சிகள் ஆட்­சேபம் தெரி­வித்­தி­ருந்­தன. இலங்­கையில் சகல அர­சாங்­கங்­க­ளுமே அந்தத் திருத்தச் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­தி­ருப்­பதை உறுதி செய்து கொண்­டன. என்­னாலும் கூட, அதை நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்­க­வில்லை’ என்று திரு­மதி குமா­ர­துங்க குறிப்பிட்­டி­ருந்தார்.

இந்­தியா அக்­க­றைப்­ப­டாத பட்­சத்தில் சமா­தான உடன்­ப­டிக்­கையின் எந்­த­வொரு ஏற்­பாட்­டையும் நடை­ மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து இலங்கை கரி­சனை காட்டப் போவ­தில்லை என்­பதே உண்மை. உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்ட கால­கட்­டத்­துக்குப் பின்னர் பெரிதும் மாறி­விட்ட சர்­வ­தேச அர­சியல் நிலை­வ­ரங்­க­ளுக்கு மத்­தியில் இந்­தியா இது­வி­ட­யத்தில் இலங்கை மீது எந்த நெருக்­கு­த­லையும் பிர­யோ­கிக்க முன்­வ­ரப்­போ­வ­தில்லை. அதற்­கான தேவை தனக்கு இருப்­ப­தாக இந்­தியா இப்­போது கரு­த­வில்லை.. தமிழர் பிரச்­சி­னையைப் பயன்­ப­டுத்தி தனது நலன்­களை இலங்­கையில் இனி­மேலும் பே­ண­முடி­யு­மென்று இப்­போது இந்­தியா நம்­ப­வில்லை .

TNA-meeting-Indian-FS.aJPG_

கடந்த பெப்­ர­வ­ரியில் இலங்கை வந்­தி­ருந்த இந்­திய வெளி­யு­றவு செய­லாளர் சுப்­பி­ர­ம­ணியம் ஜெய்­சங்­க­ருடன் நடத்­திய பேச்­சு­வார்த்­தை­களின் போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் சிலர் சமா­தான உடன்­ப­டிக்­கையின் அடிப்­ப­டையில்  இந்­தி­யா­வுக்கு ஒரு கடப்­பாடு இருப்­பதால் உத்­தேச புதிய அர­சி­ய­ல­மைப்பில் வடக்கு மாகா­ணத்­தையும் கிழக்கு மாகா­ணத்­தையும் மீண்டும் இணைப்­ப­தற்­கான ஏற்­பாட்டை சேர்க்­கு­மாறு இலங்கை அர­சாங்­கத்­திடம் புது­டில்லி கேட்க வேண்டும் என்ற வேண்­டு­கோளை முன்­வைத்­தனர் .அதற்கு பதி­ல­ளித்த ஜெய்­சங்கர் இரு மாகா­ண­ங்­களின் இணைப்பை மீண்டும் செய்­யு­மாறு இலங்­கையை இந்­தியா இனிமேல் வற்­பு­றுத்தப் போவ­தில்லை.1987 சமா­தான உடன்­ப­டிக்­கைக்குப் பிறகு இது­வ­ரை­யான கால­கட்­டத்தில் பெரு­ம­ளவு காரி­யங்கள் நடந்­தே­றி­விட்­டன. இணைப்பை மீண்டும் செய்­வது கஷ்­ட­மா­னது. கடந்த காலத்­துக்குத் திரும்பிச் செல்ல முடி­யாது. சூழ்­நிலை மாறி­விட்­டது என்­பதால் கொழும்பில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தை அடுத்து அண்­மைக்­கா­லத்தில் தோன்­றி­யி­ருக்கக் கூடிய வாய்ப்­புக்­களைப் பயன்­ப­டுத்தி தமி­ழர்­களின் உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தி­லேயே சம்­பந்­தப்­பட்ட சகல தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் .

தமிழர் பிரச்சினை என்று வரும்போது எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா எந்தவிதமான நெருக்குதலையும் இனிமேல் பிரயோகிக்கப்போவதில்லை அல்லது  நெருக்குதலைப் பிரயோகிக்க வேண்டுமென்று இலங்கைத் தமிழர்கள் இனிமேல் எதிர்பார்க்கக்கூடாது என்பதே ஜெய்சங்கரின்  அந்தக் கருத்துக்கள் மூலமாக உணர்த்தப்பட்ட செய்தி என்றே கூற வேண்டும். தமிழர் பிரச்சினையில்இலங்கை அரசாங்கத்துக்கு கசப்பை ஏற்படுத்தக் கூடிய அல்லது அதனுடன் முரண்படக் கூடியதாக எந்த அணுகுமுறையையும் இந்தியா கடைப்பிடிக்கப் போவதில்லை என்பதால், சமாதான உடன்படிக்கையின் எதிர்காலம் பற்றிய அக்கறை அதற்கு இருக்குமென்று எதிர்பார்ப்பதற்கில்லை.

13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளையே முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையை வழிக்குக் கொண்டுவர இயலாத இந்தியா அந்தத் திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கலை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு  இலங்கையை கேட்கவா போகிறது? தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை, இந்தியா இனிமேல் என்ன செய்யப்போகிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதல்ல இப்போதுள்ள கேள்வி. இந்தியாவை நம்பிக் கொண்டு இனிமேலும் காத்திருப்பதனால் தமிழர்கள்  அடையக்கூடியது என்ன என்பதே முக்கியமான கேள்வியாகும்.

சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவேளையில் இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்தவர் தமிழ்நாட்டவரான ஏ. பி. வெங்கடேஸ்வரன். இலங்கைப் பிரச்சினையை ராஜீவ் காந்தியும் அவருக்கு நெருக்கமானவர்களும் கையாண்ட முறையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வெளிறவுச் செயலாளர் பதவியில் அவரால் தொடர்ந்து இருக்கவும் முடியவில்லை. இந்தியப் படைகள் இலங்கைக்கு செல்கின்ற போது அந்நாட்டில் இருக்கின்றதையும் விட மிகவும் மோசமான நிலையே அந்தப்படைகள் திரும்பிவரும் போது அங்கு ஏற்பட்டிருக்கும் என்று அவர் அன்று சொன்ன கருத்து இச்சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது.