சமூக வலைத்தளங்களில் வைரலாகும் “ஓல் ஐஸ் ஒன் ரஃபா”
காசா நகர் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையை குறிக்கும் வகையில், “ஓல் ஐஸ் ஒன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தெற்கு காசாவில், ரஃபா நகரத்திலுள்ள தற்காலிக முகாம்கள் மீது, இஸ்ரேல் படைகள் கடந்த 26 ஆம் திகதி குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருந்தது.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன், 249 பேர் காயமடைந்ததாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதனிடையே, நேற்றைய தினமும் ரஃபா தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையிலேயே, காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையைக் குறிக்கும் வகையில், All eyes on Rafah என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குறித்த ஹேஷ்டேக் உடன் பாலஸ்தீன மக்கள் குறித்து, இந்தியாவிலுள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
-(3)




