செய்திகள்

ஜேர்மனி புகையிரத நிலையத்தில் கோடரி தாக்குதல்

ஜேர்மனியின் டசல்டோர்வ் புகையிரத நிலையத்தில் நபர் ஓருவர் கோடரியால் ஏழு பேரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுகொஸ்லாவியாவை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 36 வயது நபர் ஓருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்,மூவர் மிக மோசமான காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என தெரிவித்துள்ள பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.