செய்திகள்

மத்தியகிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தலாம் என்ற புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது- இஸ்ரேலில் டிரம்ப்

சவுதிஅரேபியாவிற்கான தனது விஜயத்தின் பின்னர் மத்தியகிழக்கில் சமாதானமும் ஸ்திரதன்மையும் ஏற்படும் என்ற புதிய நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
இஸ்ரேலிற்கான தனது விஜயத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
எனது சமீபத்திய குறுகிய பயணங்களின் போது புதிய நம்பிக்கைக்கான காரணங்கள் தோன்றியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
மத்தியகிழக்கிற்ல் அமைதி ஸ்திரதன்மை பாதுகாப்பு என்பவற்றை ஏற்படுத்துவதற்கான முன்னொரு போதும் இல்லாத சந்தர்ப்பம் கிடைத்துள்ளது ஆனால் இணைந்தே அதனை சாதிக்க முடியும் அதனை தவிரவேறு வழியில்லை என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.