செய்திகள்

மான்செஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட முக்கிய நபர்கள் சிலரை கைதுசெய்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

மான்செஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் சிவரை கைதுசெய்துள்ளதாக பிரிட்டனின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிரேஸ்ட அதிகாரி மார்க்ரோவ்லி தெரிவித்துள்ளார்
மேலும் பலரை கைதுசெய்யும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த கைதுகள் மிகவும் முக்கியமானவை சல்மான் அபெடி தொடர்பான விசாரணைகளில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ள முக்கிய நபர்கள் சிலரை நாங்கள் கைதுசெய்துள்ளோம் இன்னமும் சிலரை கைதுசெய்யவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.