வடகொரியா குறித்த பொறுமை முடிவிற்கு வந்துவிட்டது- தென்கொரியாவில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி எச்சரிக்கை
தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி மைக்பென்ஸ் இரு நாடுகளின் எல்லைகளிற்கு நடுவில் உள்ள இராணுவமயப்படுத்தப்படாத பகுதிக்கு சென்றுள்ளடன் வடகொரியா குறித்த அமெரி;க்காவின் பொறுமை முடிவிற்கு வந்துவிட்டது என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய நாடுகளிற்கான தனது விஜயத்தின் ஓரு பகுதியாக தென்கொரியா சென்றுள்ள பென்ஸ் தென்கொரியா தொடர்பில் அமெரிக்கா மிக உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்கா தனது வலிமை மூலம் அமைதியை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியா குறித்து அமெரிக்கா தந்திரோபாய ரீதியிலான பொறுமையை கடைப்பிடித்து வந்தது எனினும் அது முடிவிற்கு வந்துவிட்டது,வடகொரியாவின் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை சீனா மேற்கொள்ள வேண்டும் அல்லது அமெரிக்காவும் அதன் சகாக்களும் அந்த மாற்றத்ததை ஏற்படுத்த முயலவேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.