செய்திகள்

கருத்து வேறுபாடால் சின்னத்திரை நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை

நடிகை நத்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். `வம்சம்’, `கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்தினி. மேலும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.நந்தினி தனது கணவர் கார்த்திகேயனுடன், வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது வீட்டின் அருகாமையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கிய கார்த்திகேயன், அந்த விடுதியிலேயே குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருமணம் முடிந்து சில மாதங்களில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நந்தினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்து போன கார்த்திக் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், உடற்பயிற்சி கூடத்தை சரிவர நடத்த முடியாமல் அந்த உடற்பயிற்சி கூடத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் காலில் ஏற்பட்ட காயம் மற்றும் மன அழுதத்திற்காக நேற்று முன்தினம் கார்த்திக்கை அவரது தாய் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று விட்டு வீட்டிற்கு இருவரும் வந்துள்ளனர். அப்போது மாலையில் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி கார்த்திக் அவரது தாயிடம் கூறி விட்டு சென்று விட்டார்.
இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை, மேலும் செல்போனும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாய், கார்த்திக் தங்கியிருந்த லாட்ஜூக்கு சென்றார். அப்போது அவர் தங்கியிருந்த அறையின் கதவை தட்டி உள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்து லாட்ஜ் ஊழியர்களை அழைத்துள்ளனர். அப்போதும் கதவு திறக்காததால் விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து பாத்ரூமில் தற்கொலை செய்து கொண்டபடி இறந்தநிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்திக் எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கி உள்ளது. அதில் தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்றும், அக்கா, அம்மாவை நன்றாக பார்த்துக்கொள் என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். nandhni_pp_19214