தீபிகா, சோனாக்ஷியின் கணவர்கள் பெயரை வெளியிட்ட அரசாங்கம்?
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளின் பெயர்களில் நடந்துள்ள ஒரு பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. உத்திர பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் – தீபிகா படுகோன், சோனாக்ஷி சின்ஹா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ராணி முகர்ஜீ ஆகியோரின் பெயர்களில் ரேஷன் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு திருமணம் ஆகி கணவர்கள் இருப்பது போல போலி பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரேசன் கார்டுகளில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் கணவர் பெயர் சாதுலால் எனவும், தீபிகா கணவர் பெயர் ராகேஷ் சந்த் எனவும், சோனாக்ஷியின் கணவர் ரமேஷ் சந்த் எனவும், ராணி முகர்ஜி கணவர் பெயர் ராம் ஸ்வரூப் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடியை செய்த ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
N5