செய்திகள்

மீண்டும் திரையில் இணையும் சூர்யா, ஜோதிகா

திரையில் காதலித்தது மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் சூர்யா-ஜோதிகா.

இதில் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 8 வருடங்களாக நடிக்கவே இல்லை.நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இதை தொடர்ந்து ஜோதிகா தேசிய விருது இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.இப்படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து அவரின் உண்மைக் காதல் கணவர் சூர்யாவும் நடிக்கவிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

N5