செய்திகள்

அசிட் தாக்குதலுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

புலத்கொஹுபிட்டி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மொரந்தொட்ட பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையே இடம்பெற்ற மோதலின் போது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் இதில் அந்த தாக்குதலுக்கு இலக்கிய 8 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக அசிட் தாக்குதலுக்கு இலக்காகி எரிகாயங்களுக்கு உள்ளாகிய 8 பேரில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமானது என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக புலத்கொஹுபிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -(3)