செய்திகள்

அமெரிக்காவின் தடைகளை அடுத்து ஈரானில் இருந்தான எண்ணெய் இறக்குமதியை இலங்கையும் நிறுத்தியது

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் தடைகளை அடுத்து ஈரானில் இருந்தான மசகு என்னை இறக்குமதியை நிறுத்தி இருப்பதாக பெட்ரோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தடைகள் அறிவிக்கப்பட்ட உடனேயே தாங்களும் இந்த இறக்குமதியை கைவிட்டுவிட்டதாக கூறியுள்ள அவர் தற்போது சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அக்கியா நாடுகளிடம் இருந்தே இறக்குமதியை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 50,000 பரல்கள் எண்ணெய்யை நாளாந்தம் ஈரானில் இருந்து இலங்கை இறக்குமதி செய்து வந்தது.