செய்திகள்

கொழும்பில் பல பிரதேசங்களில் 19 மணி நேர நீர்வெட்டு

நாளை 21ஆம் திகதி இரவு முதல் கொழும்பில் மட்டக்குளிய உள்ளிட்ட பிரதேசங்களில் 19 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி நாளை இரவு 11 மணி முதல் நாளை மறுதினம் மாலை 6 மணி வரைக்கும் மட்டக்குளிய , கொட்டாஞ்சேனை , தொட்டலங்க, கிராண்ட்பாஸ் மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)