செய்திகள்

தந்தையால் தீ மூட்டி மகள் பரிதாப மரணம்.

அளவெட்டி மத்தியை சேர்ந்த திருவிளங்கம் ஜனனி (வயது 27)என்ற யுவதி தந்தையால் தீ மூடப்பட்டு தீ காயங்களுக்குளான நிலையில் ஒரு வாரத்தின் பின் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.மேற்படி யுவதி வீட்டில் ஒரே பெண் ஆவர்.தந்தை (72வயது )கூலி வேலை செய்து வருகிறார்.வேலைக்கு சென்று வந்து பொதுவாக வீட்டில் மனைவி,மக்களுடன் வாய்தகராறில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.அதே போன்று கடைந்த 25ஆம் திகதி இரவு 7மணிக்கு வீட்டுக்கு வந்த குறித்த தந்தைஇரவு உணவு என்ன என கேட்டுள்ளார்.அதற்கு பாணும் சம்பலும் என மகள் பதிலளித்துள்ளார்.அதற்கு தகாத வார்த்தையால் மக்களையும் மனைவியையும் திட்டியுள்ளார்.மனமுடைந்த மகள் மண்எண்னையினை எடுத்து தன் மேல் ஊற்றியுள்ளார்.தாய் கெஞ்சி கதறி குறித்த தற்கொலை முயற்ச்சியில் இருந்து மகளை காப்பாறியுள்ளார்.அதன் பின் மகள் குளிப்பதற்க்காக சென்றுள்ளார்.அந்த இடத்துக்கு சென்ற தகப்பனார் நீ சாகிறதுக்கு தானே போனநி;செத்துபோ தீ குச்சியை எடுத்து மகள் மேல் பற்ற வைத்துள்ளார்.சம்பவத்தை நேரில் பார்த்த தாய் பற்றி எரிந்த மகளை அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமத்துள்ளார்.மேலதிக சிகிச்சைக் காக யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.குறித்த யுவதி தீ காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெறும் போது பொலிஸாருக்கு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்படி தந்தை கைது விசாரணை மேற்கொண்டதில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.