யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் “ஏறுது பார் கொடி ஏறுதுபார்” என தமிழீழத் தேசிய கீதம் இசைப்பு
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமேனன் தலைமையில் நேற்று பொங்குதமிழ் நினைவுத் தூபி திறக்கப்பட்டது. திரை நீக்கப்பட்ட தும் தமிழீழ விடுதலைப் புலி களினால் வெளியிடப்பட்ட தேசிய கீதமான ”ஏறுது பார் கொடி ஏறுதுபார்” என்கிற பாடல் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து புலிகளின் எழுச்சிக் கீதங்களும் ஒலிபரப்பப்பட்டன.நினைவுத் தூபி திறக்கப்பட்டபோது புரட்சி கீதங்கள் இசைக்கப்பட்டன. நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பவை அங்கீகரிக்கப்படவேண்டும் எனப் பிரகடனப்படுத்தி 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி பன்னாட்டுச் சமூகத்தை தமிழர் தேசத்தின் பக்கம் திருப்பும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு நடத்தப்பட்டது.
அதன் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தில் நினைவுப் பலகை அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பலகை அகற்றப்பட்டுத் தற்போது நினைவுத் தூபி கட்டப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டைப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டிருந்தது.(15)