சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் சனி தோறும் கூட்டுப்பிரார்த்தனை
யாழ்.குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் வாராந்தம் சனி தோறும் காலை 10 மணிக்குக் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை (அன்னதானம்) இடம்பெற்று வருகிறது. இதில் சின்னஞ்சிறார்கள், அடியவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று ஆன்மீக நாட்டத்தில் கவனம் செலுத்துவதைக் காண முடிகிறது.
அத்துடன் யாழ்.மாவட்டத்தில் வேறெங்கும் காண முடியாத ஈழத்து இந்தியச் சித்தர்களின் திருவுருவப்படங்கள் பல ஆச்சிரமத்தைச் சூழக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






