செய்திகள்

அடுத்த திட்டம் என்ன? : தீர்மானமெடுக்க கூடுகிறது மைத்திரி , ரணில் அணிகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர்கள் இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியினர் இன்று மாலை அலரி மாளிகையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடி கலந்துரையாடவுள்ளனர்.
நாளை பிற்பகல் 1 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அது தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் வகையிலேயே இவர்கள் இவ்வாறாக சந்திக்கவுள்ளனர்.
நாளைய தினத்தில் பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக பிரேரணையொன்று கொண்டு வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)