செய்திகள்

அனைத்து வேட்பாளர்களுக்கு பாதுகாப்பை வழங்க ஜனாதிபதி ஆலோசனை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் தேவையான பாதுகாப்புகளை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இதன்படி வேட்பாளர்கள் கோரும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி விடயத்திற்கு பொறுப்பானவர்களுக்கு அறிவித்துள்ளார். -(3)