செய்திகள்

அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர்-ரணில்

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். அரசாங்கம் மீது மாத்திரமல்ல. எதிர்க்கட்சி மீதும் அவர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.சிலர் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்புவதாகக் கூறுகின்றனர். நாம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எமக்கு பழைய முறையில் அரசியல் செய்து முன்னேற முடியாது.எனவே எனக்கும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் புதிதாக சிந்திக்கும் பொறுப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.(15)