அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள முறையில் மாற்றத்திற்கு திட்டமாம்
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையை மாற்றியமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஜித் கே திலகரட்ன தெரிவிக்கையில்,
வழமையாக 20 முதல் 25ஆம் திகதிகளிலேயே சம்பளம் வழங்கப்படும். இதனை இரண்டு பிரிவுகளாக பிரித்து 5 முதல் 10 ஆம் திகதி வரை ஒரு பிரிவாக வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்தால் அது பிரச்சினைகளுக்கு உரிய விடயமாக அமையுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)