செய்திகள்

அலோசியஸை பேர்ப்பச்சுவல் நிறுவனத்திலிருந்து விலக கோரியிருந்தேன் : பிரதமர்

அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கி ஆளுனராக நியமிக்க முன்னர் அவரின் மருமகன் அர்ஜுன அலோசியஸை பேர்ப்பச்சுவல் டெசரிஸ் நிறுவனத்தின் அனைத்த நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க வேண்டுமென தான் கோரியிருந்தாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறிகள் தொடர்பான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகி விளக்கமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அர்ஜுன அலோசியஸ் பேர்ப்பச்சுவல் நிறுவனத்துடன் இணைந்த வேறு நிறுவனமொன்றில் பதவி வகித்தமையை தான் அறிந்திருக்கவில்லையெனவும் பிரதமர் அதன்போது தெரிவித்துள்ளார். -(3)