செய்திகள்

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தால் நீடிக்க சபை அனுமதி

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தால் நீடிப்பதக்கு சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் பற்றிய விவாதத்தின் பின்னர்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியான ஸ்ரீதரன் வாக்கெடுப்பை கோரினார்.
இதன்போது அரசாங்கத்தை சேர்ந்த எம்.பிக்களும் எதிர்க்கட்சி எம்.பிக்களுமாக 40 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் எதிராக வாக்களித்தனர். -(3)