செய்திகள்

ஆகஸ்டில் பொதுத் தேர்தல்?

பொதுத் தேர்தலுக்கான தினம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.
இன்று முற்பகல் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் கூடி இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளனர்.
குறிப்பாக சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய 60 முதல் 70 நாட்களுக்குள் தேர்தலை நடத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி பெரும்பாலும் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் இந்த வாரத்திற்குள் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. -(3)