செய்திகள்

இத்தாலியை போன்று பிரிட்டனிலும் நகரங்களை மூடும் நிலை வரலாம் : விசேட நிபுணர்கள் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியை போன்று பிரிட்டனிலும் நகரங்கள் பலவற்றை மூடவேண்டிய நிலைமை ஏற்படலாம் என அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பிரிட்டனும் அந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இவ்வாறாக இது வரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 321 பேர் அந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் இதன்படி நாளுக்கு நாள் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நிலைமை தொடர்ந்தால் எதிர்வரும் 2 வாரங்களில் இங்கும் நகரங்களை மூட வேண்டிய நிலைமை உருவாகலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிரிட்டன் விமான சேவையினால் இத்தாலிக்கு மேற்கொள்ளப்படும் விமான சேவைகளும் ஏப்ரல் 4ஆம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. -(3)