செய்திகள்

இந்த சூழ்நிலையை தேர்தலை ஒத்தி வைப்பதற்காக பயன்படுத்தி விடக் கூடாது : என்கிறார் மகிந்த தேசப்பிரிய

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை காரணம் காட்டி தேர்தல்களை ஒத்தி வைக்க நடவடிக்கையெடுத்துவிடக் கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
யுத்தக் காலத்தில் கூட தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போதுள்ள நிலைமையை தேர்தலை ஒத்தி வைப்பதற்காக யாரும் பயன்படுத்தி விட வேண்டாமென அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)