செய்திகள்

இரகசியமாக புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் : மட்டக்களப்பில் மக்கள் வீதியில் போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டு தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று மாலை அந்த பிரதேசத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இதன்போது பொலிஸார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டு விரட்டியடித்துள்ளார்.

நேற்றிரவு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாநகர மேயர் இணைந்து இரகசியமாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடித்த தற்கொலை குண்டு தாரியின் தலையை புதைத்ததாக ஆர்ப்பாட்டகார்கள் தெரிவித்துள்ளனர்-(3)