செய்திகள்

இரணைமடுக் குளத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்படுகின்றன

இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் நேற்றுப் பிற்பகல் 35.05 அடியை எட்டியது. குளத்தின் மொத்த கொள்ளளவு 36 அடியாக உள்ளது. அதனால் இன்று சனிக்கிழமை முற்பகல் 6 வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால் தாழ்வான பகுதிகளான பன்னங்கண்டி, ஊரியான் , முரசுமோட்டை, வட்டக்கச்சி பண்ணைப் பகுதி மற்றும் கண்டாவளை ஆகிய பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசத் திணைக்களம் கேட்டுள்ளது.(15)