செய்திகள்

இலங்கையில் இரகசிய முகாம்கள் எதுவும் கிடையாது : ஜனாதிபதி

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை. இரகசிய முகாம்களும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் காணாமல் போனவர்கள் எங்கும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்களும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லண்டனுக்கு சென்றிருந்தபோது பீ.பீ.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் ஒரு பகுதி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்கூறியவாறு கருத்து தெரிவித்துள்ள அவர் சிலர் நாட்டை பிளவு படுத்தும் நோக்கத்தில் செயற்படுவதாகவும் அதற்கு இடமளிக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழீழம் தொடர்பாக கதைப்பவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையையும் தான் நடத்த மாட்டேன் எனவும் அவர்கள் பிரச்சினைகள் இருப்பதாக கூறி பணம் சம்பாதிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். -(3)