செய்திகள்

இலங்கையில் கொரோனா : 15 ஆவது உயிரிழப்பு பதிவு!

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளது.
குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த குளியாப்பிட்டிய உணலிய பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர் இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. -(3)