உங்களை பதவி விலக்கிவிட்டேன் – ரணிலுக்கு மைத்திரி கடிதம் : நான் விலகவில்லை – மைத்திரிக்கு ரணில் கடிதம்
பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக அறிவித்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதியினால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனக்குள்ள அதிகாரத்திற்கமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நான் உங்களை பதவி விலக்கியுள்ளேன். என குறிப்பிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நானே பிரதமராக பதவி வகிக்கின்றேன். அரசியலமைப்புக்கமைய நான் விலகாது பிரதமராக முடியாது என அறிவித்து ரணில் விக்கிரமசிங்க பதில் கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். -(3)