செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமரப்போகும் சஜித் : ரணிலுக்கு முன்வரிசையில் ஆசனம்

இன்றைய தினம் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் இதன்போது ஜனாதிபதிக்காக விசேட ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.
சபாநாயகரின் ஆசனம் அமைந்துள்ள இடத்தில் அந்த ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது. அந்த இடத்திலிருந்து அவர் சிம்மாசன உரையை நிகழ்த்துவார்.
இதேவேளை ஆளும் கட்சி பக்கத்தில் மகிந்த ராஜபக்‌ஷ பிரதமருக்கான ஆசனத்தில் அமரவுள்ளதுடன் எதிர்க்கட்சி பக்கத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் சஜித் பிரேமதாச அமரவுள்ளார்.
அத்துடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்வரிசையில் ஆசனமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. -(3)