செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் யார்? 57 எம்.பிக்களின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு கடிதம்

எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற சர்ச்சை தொடரும் நிலையில் அந்த பதவிக்கு சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் 57 எம்.பிக்களினால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கடிதம் தொடர்பாக அவதானம் செலுத்தி கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதனை தனக்கு அறிவிக்குமாறு சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற சம்பிரதாயப்படி கட்சியின் தலைவரையே எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்படுவார் எனவும் இதனால் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து தமக்கு அதுபற்றி அறிவிக்குமாறும் சபாநாயகர் ஏற்கனவே கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. -(3)