செய்திகள்

எந்த முறைப்படி மாகாண சபை தேர்தலை நடத்துவது? கட்சி தலைவர்கள் 26 இல் சந்திப்பு

புதிய கலப்பு முறைப்படியான அல்லது விகிதாசார முறைப்படியா மாகாண சபை தேர்தலை நடத்துவது என்று முடிவுசெய்ய கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி சந்திக்க உள்ளனர்.

இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தலை நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ரவூப் ஹக்கீம் மற்றும் தினேஷ் குணவர்தன உட்பட அநேகமான கட்சி தலைவர்கள் பழைய முறைபப்டியே தேர்தல் நடத்தபபடவேண்டும் என்ற கருத்தை தெரிவித்த போதிலும் புதிய முறைப்படியே தேர்தல் நடைபெறவேண்டும் என்ற கருத்தை மாகாண சபைகள் அமைச்சர் கூறினார்.